பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜ தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டில்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திலும் ஏராளமான தொண்டர்கள் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரின் புகைப்படங்களை ஏந்தியும், இனிப்புகளை கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: மாபெரும் வரலாற்று தீர்ப்பை கொடுத்து, பீஹார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர் பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். மறைந்த ஜெய்பிரகாஷ் நாராயணன், கர்பூர் தாகூரை வணங்குகிறேன். இனி ஒரு போதும் ஆர்ஜேடி அரசு மீண்டும் வரப்போவது கிடையாது.




















