கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மலை மீது மஹா தீபம் ஏற்ற, 4 ஆயிரத்து 500 கிலோ நெய் கொள்முதல் செய்து, கோவிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, 24-ஆம் தேதி கோடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 3-ஆம் தெதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள, மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில் மஹா தீபம் ஏற்ற, 4 ஆயிரத்து 500 கிலோ நெய் ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய் தற்போது கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவிலில் தொடங்கப்பட்டுள்ள நெய் காணிக்கை கவுன்டரில் செலுத்தலாம். நேரில் வர முடியாத பக்தர்கள், ஆன் லைன் மூலமாக செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















