ஞானசேகரன் விவகாரதைக் குறித்து அண்ணாமலையின் கேள்விகள்:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஞானசேகரன் என்பவரை கைது செய்து , மே 28, 2025 அன்று சென்னை மகளிர் நீதிமன்றம் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.பின் ஜூன் 2,2025 அன்று 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்த வழக்கைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஞானசேகரனுக்கும், திமுக விற்கும் இடையேயுள்ள தொடர்புகளை வெளிப்படுத்தி, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், ஞானசேகரனின் தொலைபேசி அழைப்பு பதிவுகள் (CDR) மற்றும் அவரது திமுகவுடனான தொடர்புகளை சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் அண்ணாமலை, ஞானசேகரனின் ஒரு வருட தொலைபேசி உரையாடல்களை விரைவில் வெளியிடப்போவதாகவும், இதில் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவருடன் ஞானசேகரன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டும் , அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதுகுறித்து ஏன் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின், ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல, ஆனால் திமுக அனுதாபி என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய மகளிர் ஆணையம், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணாமலை, இந்த வழக்கில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது “அதிகாரியுடன் ஞானசேகரன் பேசியதை சார்ஜ் சீட்டில் கொண்டு வந்தீர்களா? எனவும் அந்த அதிகாரியின் பெயரை இன்னும் 48 மணி நேரத்தில் வெளியாடப்போகிறேன்”, எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த செயல், தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை, திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து, இந்த வழக்கில் முழுமையான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் அண்ணாமலையின் இந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு திமுக அரசும்,காவல் துறையும் என்ன பதில் அளிக்கப்போகிறது எவ்வளவு சீக்கிரம் அளிக்கப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.