நடிகர் விஷால் மீது ரூ.21.29 கோடியை 30% வருடாந்திர வட்டியுடன் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019-ஆம் ஆண்டு, விஷால், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனதிடம் 21 கோடியே 29 லட்சம் கடனை, லைகா புரொடக்ஷன்ஸ் அடைத்துவிட்டு, விஷால் அதைத் திருப்பிச் செலுத்த ஒப்பந்தம் செய்தனர். இந்த ஒப்பந்தத்தின் படி, விஷால் தனது எதிர்கால படங்களின் உரிமைகளை லைகாவுக்கு அடமானமாக வைத்தார்.
விஷால், நீதிமன்ற உத்தரவின்படி ரூ.15 கோடியைப் பாதுகாப்பு தொகையாகச் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் பணம் இல்லையெனக் கூறியபோதிலும், அதே நாளில் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி பெற்றது தெரியவந்தது. .
விஷால், நீதிமன்ற உத்தரவை மீறியதால், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் படங்களைத் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, விஷால் தனது சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் முழுமையான விவரங்களைச் சமர்ப்பிக்காததால், நீதிமன்றம் அவரை எச்சரித்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. இதன்படி, லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. அதாவது 21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் நம்பிக்கையும், சட்டப் பின்பற்றலும் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. விஷால், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி, தனது கடனைத் திருப்பிச் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.