பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாகப் பேச அமித்ஷா தமிழகம் வந்திருக்கலாமென நினைக்கிறேன் – திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி மற்றும் திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அதில் கூறுகையில்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்.
அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாகப் பேச அமித்ஷா தமிழகத்திற்கு வந்திருக்கலாமென நான் நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
நான் முருகனுக்கு விழா நடத்தும்போது விமர்சனம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஒவ்வொரு பகுதிகளிலும் கடவுளை வைத்து அரசியல் செய்வார்கள்.
கேரளாவில் ஐயப்பனை தொட்டார்கள், ராமரை தொட்டார்கள் ராமர் கோவில் கட்டி விட்டபிறகு அது முடிந்து விட்டது.ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொட்டார்கள். தற்பொழுது தமிழ்நாட்டில் வந்து முருகனை தொட்டுப் பார்க்கிறார்கள்.
பல ஆண்டுகளாகத் தமிழர்களின் கடவுளாக இருக்கக்கூடிய முருகன் இதற்கு முன்பு அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. இவ்வளவு காலம் பாஜக எதுவும் செய்யவில்லை. நாங்கள் முருகனை தூக்கி சென்றவுடன் முருகனை நாம் பேசலாமெனப் பாஜக பேசுகிறார்கள்.
நான் என் இறையை போற்றுகிறேன் நீங்களும் அதைப்போற்றினால் மகிழ்ச்சி அடைவேன் எனத் தெரிவித்தார்.
நாங்கள் வழிபட்ட கடவுள்களை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் அது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டது போல் நெல்களை பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டுள்ளதா இதற்குக் கோபப்பட வேண்டியது விவசாயிகள் தான். இது போன்ற அநீதி ஆட்சியாளர்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிக்கும் மக்களும் இதற்குப் பொறுப்பு எனச் சீமான் தெரிவித்துள்ளார்.