தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் சுருளி அருவி உள்ளது. அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு உள்ளிட்ட இடங்களில் கனமழையால், சுருளி அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் நீர்வரத்து சீரடையும் வரை சுற்றுலாப் பயணிகள், அருவிக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



















