விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பிலான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு இன்று முதல் தொடங்கி உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக வினர் எவ்வாறு எதிர்கொண்டு வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,SIR குறித்து பேசுகையில் திமுக சார்பில் SIR குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இன்று SIR நம் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் முதலில் தன் ஓட்டு தனது வீட்டில் உள்ளோர் ஓட்டை இணைக்க வேண்டும் பின் கழகத்தோழர்களின் ஓட்டை இணைக்க வேண்டும் என்றும் 2025 வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் 2026 இல் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் இந்தியாவிலே சிறந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார் என்றும் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் நமது முதல்வர் எனவும் பேசினார்.
பின்னர் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், தமிழகத்தில் 50 சதவிகித ஓட்டுகள் திமுக விற்கு உள்ளது என்றும் வாக்காளர் பட்டியலில் இவற்றை சேர்க்க முயற்சி செய்தாலே மாபெரும் வெற்றி கிடைக்கும் இதை உறுதி செய்யும் விதமாக திமுக வினர் சிறுபான்மையினர்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் மற்றும் மைனாரிட்டி ஓட்டுகளை சேர்க்க வேண்டும் இவைகள் எல்லாம் திமுக ஓட்டுகள் இவர்களின் ஓட்டுகளை புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்க பாஜக முயற்சிக்கும் இதையும் வெளி மாநிலத்தவர் ஓட்டுகளை சேர்க்கிறார்களா என்பதையும் திமுக தொண்டர்கள் கவனிக்க வேண்டும் என்றார். இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



















