உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கட்டுப்படுத்த நினைக்கும், மத்திய பிஜேபி அரசின் முயற்சிக்கு கிடைத்த பெரிய அடி என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்துள்ள இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை எந்தவொரு காரணமும் இன்றி, ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு, கூட்டாட்சி தத்துவத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரக் கொள்கைகளையும் வலுவலக உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் ஒவ்வொரு முடிவும் மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடே என்பதை இந்தத் தீர்ப்பு மறுபடியும் அனைவருக்கும் உணர்த்துவதாக செல்வப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல்வேறு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.



















