தகுதியுடையவர்கள் கலைஞர் உரிமைத்தொகை பெற தி.மு.க.வினர் உதவ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில், சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார். இதுவரை 82 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ள நிலையில், இன்று போடி, சாத்துர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தேர்தலில் வெற்றி பெற கடுமையாக, பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளை அவர் அறிவுறுத்தினார். கலைஞர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


















