பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 55,000-க்கு அருகில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்களில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதனை “மாபெரும் பேரழிவு” எனக் குறிப்பிட்டு வருகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்ட சண்டைகள் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பல இடங்களில் மருத்துவ வசதிகள் முடங்கியுள்ளன. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் சிகிச்சை இன்றி தவிக்கின்றனர்.
உலக நாடுகள் எதிர்ப்பு
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐநா, இஸ்ரேலை பதிலடி வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதுவரை நிலைமை மாறவில்லை.
முடிவில்லா சிக்கல்
பெரும்பாலான மக்களும் காசா எல்லைக்கு வெளியே செல்ல முடியாமல் சிக்கியுள்ளனர். உணவு, மருந்துகள், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.
வாழ்க்கையை இழந்த காசா:
தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் மற்றும் நிலத்தடி தாக்குதல்களால் காசா நகரம் ஒரு அழிந்த நகரமாக மாறியுள்ளது. சாலைமுழுவதும் இடிந்து விழுந்த கட்டடங்கள், பொருட்களைத் தேடிக்கொண்டு திரியும் மக்கள், தூசியால் மூடிய வானம், தினமும் பசிக்காக போராடும் குழந்தைகள், உயிரை காத்துக்கொள்ள போராடும் பெரியவர்கள் – இவை அனைத்தும் உலகம் காணும் பெரும் கலவரம் மட்டுமல்ல, நம் மனிதாபிமானத்தின் தோல்வி.
முன்னதாக இருந்த சிறு சிறு பாதுகாப்பு முகாம்களும் இப்போது தப்பிக்க முடியாத கொடூர மையங்களாக மாறிவிட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின்றி வாழ்ந்து வருகின்றனர். சுகாதார வசதிகள் முற்றிலும் முறிந்து விட்ட நிலையில், நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன.
மருந்துகளுக்கு சுங்குத்தடை, உணவுப் பொருட்கள் அனுப்ப அனுமதி இல்லாத நிலை போன்ற மோசமான சூழ்நிலையியை மேற்கொண்டு வருகிறது காசா.
சர்வதேச சமூகம் என்ன செய்கிறது?
மனிதாபிமான உதவிகளுக்காக பல நாடுகள் உதவ முன்வந்தாலும், இஸ்ரேல் விதிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்றடைவதில்லை.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வலுக்கும் வேகத்தில், காசா மக்கள் ஒரு நாளும் அமைதியான காலையைப் பார்த்ததில்லை. இந்தத் தாக்குதல்கள் எப்பொழுது முடிவுக்கு வரும் என்பதற்கான பதில் தெரியாத, அந்த மக்களின் கண்ணீரும், வலியும், கோரமும் நாள்தோறும் மேலும் மேலும் பெருகி கொண்டிருக்கிறது.
மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறிதான்!