இந்தியாவின் 18 வயது இளம் கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ், 2025 நார்வே செஸ் போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
நார்வே செஸ் 2025 போட்டியின் ஏழாவது சுற்றில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக சாம்பியன் டி. குகேஷ், சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை classical செஸ் போட்டியில் முதல் முறையாக வீழ்த்தி, போட்டியின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
குகேஷ், அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்ட இந்த classical செஸ் ஆட்டத்தில், ஆரம்பத்தில் கடினமான நிலையை எதிர்கொண்டார். அர்ஜுன், தனது ஆட்டத்தில் முன்னிலை பெற்றிருந்தாலும், குகேஷ் தனது திறமையைக் காட்டி, கடைசி நேரத்தில் போட்டியை தன் பக்கம் திருப்பினார். 92 நகர்வுகளுக்குப் பிறகு, அர்ஜுன் எரிகைசி தோல்வியை ஏற்றுக்கொண்டு, குகேஷ் வெற்றியைப் பெற்றார்.
தற்போதைய நிலை
7-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சென் 11 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அர்ஜுன் எரிகைசி 7.5 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளார்.
தனது வெற்றிகளால் இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். மிகச் சிறிய வயதில் உலக சாம்பியனான அவர், இப்போது உலகின் முன்னணி வீரர்களை வென்று மீண்டும் ஒரு பெரும் சாதனையை நோக்கி பயணிக்கிறார்.
அடுத்த சுற்றில் குகேஷ், மேக்னஸ் கார்ல்சன் அல்லது ஃபாபியானோ கருவானாவை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த வெற்றியால் அவர், Norway Chess 2025-இல் சாம்பியனாக வேண்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.