மணிரத்னம் இயக்கத்தில், உலகப் புகழ் பெற்ற நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் “தக் லைஃப்” திரைப்படம், 2025 ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட உள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் நேரத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.. குறிப்பாக, திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்த கருத்தும், அதன் தாக்கமும் அதிகமாகப் பேசப்பட்டு விமர்சத்திற்குள்ளாக மாறி இருக்கிறது .
இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சை:
சென்னையில் நடைபெற்ற “தக் லைஃப்” இசை வெளியீட்டு விழாவில், கமல் கூறிய முக்கியமான ஒரு வரி: “தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்.” என்பது. இந்த உரை, மொழியியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அவர் கருத்து தெரிவித்ததாக இருந்தாலும், அது கர்நாடகாவில் பல தரப்பினரிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. பலர் இதை “கன்னட மொழியின் அடையாளத்திற்கு அவமதிப்பு” எனக் கருத்து தெரிவித்தனர்.
இதனால் கர்நாடகா முழுவதும் கமலுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.பல கன்னட அமைப்புகள், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. சில அமைப்புகள், படம் வெளியாகும் பட்சத்தில், திரையரங்குகளில் போராட்டம் நடத்தப்படும் எனத் திறந்தவெளியில் எச்சரிக்கை விடுத்தனர்.
நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு:
திரைப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்கக் கூடாது என்று கோரி, கமல், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.அனால் கர்நாடக நீதிமன்றம் கமலிடம் சில சரமாறியான கேள்விகள் எழுப்பியது:
“நீங்கள் வரலாற்று ஆய்வாளரா?”
“நீங்கள் மொழியியல் வல்லுநரா?”
“எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது!”.
உங்கள் கருத்தால் தற்போது சிவராஜ் குமாருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தனை கோடி ரூபாய் செலவில் திரைப்படம் எடுக்கிறீர்கள் ஆனால் ஒரு மன்னிப்பு கேட்க முடியாதா? என்று கர்நாட நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தச் சர்ச்சையான பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் கர்நாடக அரசிடம் மன்னிப்பு கேட்பாரா இல்லையா என்பதை பார்ப்போம்…