எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தள்ளிவைக்கக் கோரிய கேரள அரசின் மனுவை வரும் வௌ¢ளிகிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை போன்று கேரள மாநிலத்திலும், எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் கேரளாவில் டிசம்பர் 9, 11 என 2 நாட்கள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தள்ளிவைக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இதேபோல, ஐயுஎம்எல் கட்சியும் தனியாக மனுச் செய்திருந்தது.
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இன்று முறையிடப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் பணியோடு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியிலும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருப்பதோடு, நிர்வாகப் பணிகளும் ஸ்தம்பித்துப் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த இரு மனுக்களையும் வரும் வௌ¢ளிக்கிழமை அவசர வழக்காகப் பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.






















