நார்வே செஸ் 2025: உலக சதுரங்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நார்வே செஸ் 2025 போட்டி, மிகுந்த பரபரப்புடன் முடிவடைந்தது. இந்தப் போட்டியில், நார்வேவைச் சேர்ந்த உலக சதுரங்க மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், தனது அதிரடியான ஆட்டத்தால் ஏழாவது முறையாக நார்வே செஸ் பட்டத்தை வென்று மீண்டும் ஒரு முறை தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்,
10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2-வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3-வது இடம்) உள்ளனர்.
இந்த ஆண்டின் நார்வே செஸ் போட்டி மிகவும் கடுமையானதாக இருந்தது. பல்வேறு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர்.இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் டி.ஜி. குகேஷ், கார்ல்சன் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது.ஆனால், தனது அனுபவம் மற்றும் துல்லியமான முடிவுகளால் மேக்னஸ் கார்ல்சன் வெற்றியை உறுதி செய்தார்.
“இந்த வெற்றி எனக்கு மிகவும் பெருமையானது. ஒவ்வொரு ஆண்டும் போட்டி கடினமாகிக் கொண்டே வருகிறது. என் நாட்டில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் மீண்டும் வெற்றி பெறுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.” என்று கார்ல்சன் கூறியுள்ளார்.மேலும் இது கார்ல்சனின் இது 7-வது நார்வே செஸ் பட்டம்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழு முறைகள் சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரே வீரர் என்பதிலிருந்து, அவர் இந்த விளையாட்டில் எவ்வளவு திறமையுடையவர் என்பதை உணரலாம்.