பிகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிஜேபி-யை சேர்ந்த 2 துணை முதல்வர்கள் உள்பட 26 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பீகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பிஜேபி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, நேற்று பிஜேபி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூடி, நிதிஷ் குமாரை முதலமைச்சராக தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. முதலமைச்சராக நிதிஷ் குமாரும், பிஜேபி-யைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான், பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
(வெயிட் விஷ்வல் அப் ஆடியோ)
தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம், பிஜேபி, லோக் ஜனசக்தி பாஸ்வான் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பிஜேபி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(இபிஎஸ் பைல்)
பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.






















