ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கர்நாடக மாநிலம் சிங்கசந்திரா பகுதியில் இருந்து பைப் லைன் மூலம் கெயில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிப்காட் மின்சார வாரிய அலுவலகம் அருகே பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிகமான நெடி வீசி உள்ளது.தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பி உள்ளனர்.மேலும் கெயில் நிறுவன கண்ட்ரோல் ரூமில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு எரிவாயு செல்லும் பைப் லைனை அடைக்குமாறு கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பைப் லைன் அடைக்கப்பட்டதால் எரிவாயு செல்வது நின்றுள்ளது. அதனை தொடர்ந்து கெயில் நிறுவன அதிகாரிகளும் எரிவாயு கசிந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.



















