பாலியல் பலாத்கார சம்பவங்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்தை சந்தித்த அவர் கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ராணுவ வீரர்களுக்கான நினைவாலயம் அமைக்கப்பட உள்ளதால் அந்த இடத்திற்கான பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரும் ஜவவரி மாதம் 2ஆம் தேதி திருச்சியில் சமத்துவ நடை பயணத்தை தொடங்க இருப்பதாக கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி பேச்சிராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு துரை வைகோ அனுப்பி வைத்தார்.



















