தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குச்சாவடி நிலை முகவர்களாக 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் களத்தில் உள்ளனர்.
முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு வரச் சொல்லி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை அளிக்கின்றனர்.
இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்களர்களில் 6 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 பேருக்கு எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
திரும்பப்பெறப்பட்ட 6 கோடியே 41 லட்சத்து 83 ஆயிரத்து 413 பேரது விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது.






















