2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது ‘Thug Life’. உலக நாயகன் கமல்ஹாசன், இயக்க மாமன்னர் மணிரத்னம், இசை இளவரசர் ஏ.ஆர். ரஹ்மான் – இந்த மூவரின் கூட்டணி மீண்டும் மின்சாரம் பாய்ச்சும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, படம் அதிர்ச்சி, ஆழம், அழகு என மூன்றையும் ஒரே நேரத்தில் பரிமாறுகிறது.
‘Thug Life’ ஒரு சாதாரண கதை அல்ல. இது ஒவ்வொரு சமூக அமைப்புக்கும் எதிராக எழும் ஒரு தனிநபரின் கிளர்ச்சியைப் பற்றியது. மானுடம் சுரண்டப்படும் போது ஒரு “தக்” உருவாகிறான். சினிமா திரையில் கமல் வடிவம் பெற்ற இந்தக் கதாநாயகன், சமூகக் கொடுமைகளை தாங்க முடியாமல், தனது விதியை தானே எழுதிகே கொள்கிறார். இது ஒரு ஹீரோவின் பயணம் அல்ல — ஒரு புரட்சியாளனின் பயணம்.
கமல்ஹாசன் தனது நடிப்பை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார், ஒரு கடுமையான கேரக்டர் மூலம், அவரது முகபாவனை, உடல்மொழி, வசன உச்சரிப்பு – அனைத்தும் கூடி கலைஞனின் உச்சத்தை வெளிக்கொணர்கின்றன.திரிஷா, சிம்பு, உள்ளிட்ட நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களில் நல்ல நடிப்பை மேம்படுத்தி உள்ளனர்.
மணிரத்னம் தனது சினிமா மொழியை இந்தப் படத்தில் எளிமையாகவும், ஆழமாகவும், சொல்லி மிரட்டி இருக்கிறார். அரசியல், அரசியல் எதிர்ப்பு, மனித உளவியல் — இவை அனைத்தும் கூர்மையான காட்சிகள், நேர்த்தியான சப்டெக்ஸ்ட் மற்றும் அழகான நெறிப்பாடுகளுடன் இப்படம் கொண்டு உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்தில், பின்னணி இசையில் சில காட்சிகளில் துடிப்பை கூட்ட, சில காட்சிகளில் மௌனத்தையே இசையாக்கி இருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் இனி வரும் நாட்களில் நல்ல எதிர்பார்ப்பைக் பெறும் என எதிர்பார்க்கபப்டுகிறது.