நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் ஒருவாரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
அதேசமயம், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவாரூர் மாவட்டம் விளமல், சேந்தமங்கலம், புலிவலம், அடியக்காமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை, சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால், அத்தியாவசிய பணிக்கு வெளியே செல்வோரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.



















